சர்வதேச விசாரணையூடாக மட்டுமே ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும்!

You are currently viewing சர்வதேச விசாரணையூடாக மட்டுமே ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும்!

சர்வதேச விசாரணையூடாக மட்டுமே ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் ஜனவரி 2, 2006 ஆம் ஆண்டு திருகோணமலைக் கடற்கரையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 15 ஆம் வருடத்தினை ஜனவரி 2, 2021 இல் நாம் நினைவேந்துகின்றோம். இம்மாணவர்களின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பன்னிரெண்டு படையினர் உட்பட சாதாரண காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம் சாட்டி விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்த போதிலும் ”போதுமான சாட்சியங்கள் இல்லை” என்ற காரணத்தினால் அவர்கள் கடந்த ஜூலை 03, 2009 இல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்,அடக்குமுறைக்கு எதிராகத் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களின் தன்னெழுச்சியை அடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் படுகொலையைச் செய்தவர்கள் யார் என்பதைச் சிறீலங்காவின் நீதிப்பொறிமுறையால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருப்பதானது மிகப்பெரும் கேள்வியோன்றை ஈழத்தமிழ் மக்களின் முன்னே விட்டுச்சென்றிருக்கின்றது எனவே மக்களே சர்வதேச விசரணையைக் கோரி அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரளுங்கள்.

பகிர்ந்துகொள்ள