சிறீலங்கா இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இரு இளைஞர்கள் காயம்!

You are currently viewing சிறீலங்கா இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இரு இளைஞர்கள் காயம்!

வவுனியா- ஓமந்தை பகுதியில், இன்று அதிகாலை 4 மணியளவில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் சேமமடு பகுதியைச் சேர்ந்த பிரசாத், சஜீபன் ஆகிய இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களைக் கடத்திசென்ற வாகனமொன்றை, வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர். எனினும், குறித்த வாகனம் நிற்காமல் சென்றமையால் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட மரம், ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள