சிங்கள பேரினவாத அரசுக்கு கைகொடுக்கும் உலக வங்கி!

  • Post author:
You are currently viewing சிங்கள பேரினவாத அரசுக்கு கைகொடுக்கும் உலக வங்கி!

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

புதிய உள்நாட்டு மூலோபாயங்களை வகுப்பதிலும், அபிவிருத்தி பங்காளி என்ற வகையிலும் ஆதரவை வழங்கி, அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான அபிவிருத்திக்காக சுற்றுலாத்துறை மீது அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதையும் அவர் பாராட்டியுள்ளார்.

இவர் தனது விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யு.டி. லக்ஷ்மன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள