சிறீலங்காவில் அதிரும் கொரோனா!

You are currently viewing சிறீலங்காவில் அதிரும் கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று நள்ளிரவில், 588 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 65 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினமே, அதிகளவு கொரோனா நோயாளர்கள் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், ஒரு நாளில் 63 நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டதே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்து வந்தது.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 588 பேரில், 455 பேர் தற்போது, மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 126 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேவேளை, இதுவரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள