சிறீலங்காவில் எட்டு நாட்களில் 515 பேர் கொரோனாவுக்கு பலி!

You are currently viewing சிறீலங்காவில் எட்டு நாட்களில் 515 பேர் கொரோனாவுக்கு பலி!

சிறீலங்காவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த எட்டு நாட்களில் மட்டும் 515 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர் அசேல குணவர்த்தனவை மேற்கோள்காட்டி அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டு வரும் நாளாந்த கொவிட்-19 உயிரிழப்பு விபரங்களின் அடிப்படையில் குறித்த மரணஙங்கள் கணிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 உயிரிழப்புகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டிருந்த எண்ணிக்கை வெளியிடப்பட்ட திகதி அடிப்படையில்

ஜூன் – 10 ஆம் திகதி – 101 பேர்

ஜூன் – 11 ஆம் திகதி – 62 பேர்

ஜூன் – 12 ஆம் திகதி – 63 பேர்

ஜூன் – 13 ஆம் திகதி – 67 பேர் (குறித்த மரணங்கள் ஜூன்-12 இல் நிகழ்ந்துள்ளன)

ஜூன் – 14 ஆம் திகதி – 57 பேர் (குறித்த மரணங்கள் ஜூன்-13 இல் நிகழ்ந்துள்ளன)

ஜூன் – 15 ஆம் திகதி – 55 பேர் (குறித்த மரணங்கள் ஜூன்-14 இல் நிகழ்ந்துள்ளன)

ஜூன் – 16 ஆம் திகதி – 59 பேர் (குறித்த மரணங்கள் ஜூன்-15 இல் நிகழ்ந்துள்ளன)

ஜூன் – 17 ஆம் திகதி – 51 பேர் (குறித்த மரணங்கள் ஜூன்-16 இல் நிகழ்ந்துள்ளன)

என இவ்வாறு கடந்த 8 நாட்களில் மட்டும் 515 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதியில் இருந்து நாளாந்த கொவிட்-19 மரணங்கள் உடனுக்கு உடன் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த 5 நாட்களில் மட்டும் நிகழ்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 289 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 51 கொவிட்-19 மரணங்கள் தொடர்பில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 2425 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments