சிறீலங்காவில் சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரொனா தொற்று!

You are currently viewing சிறீலங்காவில் சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரொனா தொற்று!

சிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்றுப் பரவல் மேலும் அதிகரித்துள்ளது என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரிய தெரிவித்தார்.

கொரோனாத் தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

“பெற்றோர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் கூட, தமது குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் கடைப்பிடிக்க வேண்டும்” – என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments