சிறீலங்காவில் பாடசாலை விடுமுறை நீடிக்கப்பட்டது!

You are currently viewing சிறீலங்காவில் பாடசாலை விடுமுறை நீடிக்கப்பட்டது!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் ஒரு வாரகாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சற்று முன்னர் விடுத்துள்ளார்.

நாளை மறுதினத்துடன் பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விடுமுறை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி பாடசாலைகளை மீளத் தொடங்குவதா என்பது தொடர்பில் 07 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments