சிறீலங்காவில் மேலும் 1178 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

You are currently viewing சிறீலங்காவில் மேலும் 1178 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

சிறீலங்காவில் மேலும் 1,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிந்திக்கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் பதிவான கொவிட் நோயார் எண்ணிக்கை இவ்வாறு அறிக்கையிடப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை

இலங்கையில் மேலும் 21 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 21 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறீலங்காவில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,944 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments