சிறீலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 15 பேர் கைது!

You are currently viewing சிறீலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 15 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இரண்டு இந்திய படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று மாலை தலைமன்னாருக்கு வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் படகில் இருந்த பதினைந்து இந்திய மீனவர்கள் தற்போது தலைமன்னாருக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments