சிறீலங்கா காவற்துறை கைது செய்த நபர் மரணம்!

You are currently viewing சிறீலங்கா காவற்துறை கைது செய்த நபர் மரணம்!

சிறீலங்கா காவற்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், காவற்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மருதானை பகுதியில் வைத்து சந்தேக நபர் தப்பிச்செல்ல முயற்சித்தபோது, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சம்பவத்தில் காவற்துறையில் ஒருவரும் காயமடைந்தாக  கூறியுள்ளனர்.

நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளராக பணியாற்றிய, ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்ததாக சிறீலங்கா காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments