சிறீலங்கா சனாதிபதியின் ஆலோசகர் விலங்கோடு உடலுறவு!இதனால் பதவி துறப்பு!

You are currently viewing சிறீலங்கா சனாதிபதியின் ஆலோசகர் விலங்கோடு உடலுறவு!இதனால் பதவி துறப்பு!

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க உடன் அமுலுக்குவரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழலில் ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிக்காக பிரேமச்சந்திர இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆஷு மாரசிங்கவின் இராஜினாமா தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சனாதிபதியின் ஆலோசகர் வீட்டுச்செல்லப்பிராணியோடு பாலியல் உறவில் ஈடுபட்டதினாலேயே இந்த பதவி துறப்பு இடம்பெற்றுள்ளதாக பத்திரிகையாளருக்கு தெரிவித்ததோடு அதுதொடர்பான நிழற்பட ஆதாரங்களையும் காணொளி அதாரங்களையும் காண்பித்துள்ளார் இநஆத ஆதாரங்களை தானே பதிவுசெய்துள்ளதாகவும் சனாதிபதி ஆலோசகரின் மனைவி பத்திரிகையாளருக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments