சிறீலங்கா நேற்று 2284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று!!

You are currently viewing சிறீலங்கா நேற்று 2284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று!!

சிறீலங்கா நேற்று 2284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 922ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 57 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 25 பேர் பெண்கள் என்றும், 35 பேர் ஆண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments