சீனாவில் கொரோனா 2வது அலை எதிரொலி ; பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து!

  • Post author:
You are currently viewing சீனாவில் கொரோனா 2வது அலை எதிரொலி ; பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து!

சீனாவில் இப்போது இரண்டாவது அலையாக தலைநகர் பிஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பீஜிங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பள்ளிகள் அனைத்தையும் மூடப்பட்டுள்ளதுடன், 1255 விமான சேவைகளையும் சீனா ரத்து செய்துள்ளது.

சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் எட்டாயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

புதன் காலை நிலவரப்படி பீஜிங்கில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள