சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்பவுள்ளது உலக சுகாதார அமைப்பு!

  • Post author:
You are currently viewing சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்பவுள்ளது உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவுக்கு நிபுணர் குழு ஒன்றை அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள  நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில்,  கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவுக்கு நிபுணர் குழு ஒன்றை அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் சீனா சென்றிருந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த பின்னர் இந்த முடிவை அவர் அறிவித்தார். 

பகிர்ந்துகொள்ள