சுதந்திரபுரம் படுககொலை நினைவு நிகழ்வு காவல்துறை தடை!

You are currently viewing சுதந்திரபுரம் படுககொலை நினைவு நிகழ்வு காவல்துறை தடை!

சுதந்திரபுரம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு சிறீலங்கா விமானப்படையினர் மற்றம் தரைப்படையினரின் கூட்டு தாக்கதல் நடவடிக்கையில் உயிரிழந்த மக்களின் 22ஆவது ஆண்டின் நினைவுநாள் நிகழ்வு வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சுதந்திரபுரம் சந்தி நிரோஜன் விளையாட்டு கழக மைதானத்தில் நினைவிற்கொள்ள உள்ள நிலையில் காலை காவல்துறை தடைசெய்யப்பட்டுள்ளது


நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் குறித்த இடத்திற்கு சென்றபோது அங்கு படையினர்,காவல்துறை சூழ்ந்து கொண்டுள்ளார்கள் ஏற்பாட்டாளர்களை அங்கிருந்த வெளியேறுமாறு பொலீசாரால் கட்டாயமாக அறிவிக்கப்பட்டு நிகழ்வு செய்யவிடாமல் தடைசெய்துள்ளார்கள்.


சுதந்திரபுரம் சந்திபகுதியில் காவல்துறை நிறுத்தப்பட்டு வீதியால் செல்பவர்களின் உந்துருளிகள் வாகனங்கள் சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள