சுவாச கருவிகளிடையே இருப்பவர்கள் இப்போது நிறைய முன்னேற்றம் – AHUS

You are currently viewing சுவாச கருவிகளிடையே  இருப்பவர்கள் இப்போது  நிறைய முன்னேற்றம் – AHUS

Ahus பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர பிரிவு மருத்துவ ஆலோசகர் Vibecke கூறுகையில்:

சுவாசக் கருவிகளிடையே இருக்கும் நோயாளர்கள் சிலர் இப்போது முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்றும், தனது சக பணியாளர்களோடு சேர்ந்து கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களையும், மற்றும் நுரையீரல் செயலிழக்க கூடிய ஆழ்ந்த நிமோனியா உடையவர்களையும் கவனித்து வருகின்றோம் என்று VG செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார்.

மேலும் நோர்வேயில் Ullevål மருத்துவமனை மற்றும் Rikshospital ஆகிய இரண்டிலும் பார்க Ahus பல்கலைக்கழக மருத்துவமனையில்தான் அதிக கொரோனா நோயாளிகள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை நான் கூறும் நேரத்தில் நோர்வேயில் 44 பேர் மரணித்து விட்டனர் என்றும், உலகளவில் 46.000 பேர் மரணமடைந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள