சுவிசில் கொரோனாவுக்கு பலியான தமிழர்!

You are currently viewing சுவிசில் கொரோனாவுக்கு பலியான தமிழர்!

சுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய லோகநாதன் என்பவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுவிஸ் செங்காளன் ஜோனா என்னும் பகுதியில் வெதுப்பகத்திற்கு மேலுள்ள குடியிருப்புத் தொகுதி ஒன்றில் 5 அறைகளில் ஒரு அறையில் தங்கியிருந்த மேற்குறித்த நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் சூரிச் நகருக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து வைத்தியசாலைக்கு தொடர்பு கொண்டபோது வைத்தியர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு தெரிவித்திருக்கின்றனர்.

அதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் நேற்று மாலை ஆகியும் அவருடைய அறையில் எந்தவொரு சலனமுமின்றி இருந்ததனால் பக்கத்து அறையில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸாரும் வைத்தியப் பிரிவினரும் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து அவரது சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

லோகநாதனின் குடும்பத்தினர் புங்குடுதீவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரின் சகோதரி ஒருவர் பேர்ண் பகுதியிலும் , மருமகள் உறவுமுறையில் உள்ள ஒருவர் பிரான்ஸ் நாட்டிலும் வசித்து வருகின்றனர்.

லோகநாதன் நீரிழிவு நோயாளி எனவும் அவர் ஒரு சுவிஸ் உணவகத்தில் வேலை செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோகநாதனுக்கு அந்நாட்டு மொழிப்பிரச்சினை உள்ளமையால் அவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி இருக்கும்போது யாருடைய உதவியையும் நாடாது வைத்தியசாலைக்கும் தொடர்புகொள்ள முடியாமல் தவிர்த்திருக்கலாம் என பிரதேசவாசி மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும் அக் குடியிருப்புத் தொகுதியில் அறையில் தங்கியிருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள