சுவீடன் வங்கிகளை ஊடறுங்கள்! துருக்கிய ஊடறுப்பாளர்கள் அறிவுறுத்தல்!!

You are currently viewing சுவீடன் வங்கிகளை ஊடறுங்கள்! துருக்கிய ஊடறுப்பாளர்கள் அறிவுறுத்தல்!!

சுவீடனுக்கும், துருக்கிக்கும் இடையிலான உறவுகள் முறுகல் நிலையை அடைந்துள்ளதையடுத்து, சுவீடனில் பிரபல வங்கிகள் மற்றும் முக்கியமானவர்கள் மீது ஊடறுப்பு தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு, துருக்கிய இணைய ஊடறுப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சுவீடனின் அரச வானொலி தெரிவித்துள்ளது.

நேட்டோ கூட்டமைப்பில் சுவீடன் அங்கத்துவம் பெறுவதை துருக்கி தடுத்துவரும் நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் சிக்கலாகியுள்ள நிலையில், சுவீடனிலுள்ள துருக்கிய தூதரகத்தின் முன்னால் வைத்து, இஸ்லாமியர்களின் வேதநூலான “குர் – ஆன்” தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவத்தினால் ஆத்திரமடைந்த துருக்கியர்கள், துருக்கியிலுள்ள சுவீடன் தூதரகத்துக்கு முன்னால்வைத்து சுவீடன் தேசியக்கொடியை எரித்ததையடுத்து சுவீடன் அரச வானொலி இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் உறைநிலையை அடைந்துள்ள நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் அங்கத்துவம் பெரும் கனவை சுவீடன் மறக்க வேண்டுமென துருக்கி தெரிவித்துள்ளதோடு, சுவீடனுடனான அனைத்து சந்திப்புக்களையும் இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments