செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணம்!

You are currently viewing செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணம்!

ஆயிரம் கோடி
ஆனைகள் தாக்கிய
வலியாய்
ஆழ்மனக் கூட்டுக்குள்
ஆறாத இரணங்களாய்
இதயத்தை
இன்னும்
பிழிகிறது!

வெள்ளைச் சீருடையில்
கள்ளமில்லாச் சிரிப்பழகில்
சூரிய ஒளியில்
மலர்ந்த தாமரைகள்
எம்மை விட்டு
பிரிந்த கொடியதுயரின்
வடுக்கள் இதய இடுக்குகளில்
இன்னும் ஈரமாய் கசிகிறது!

துள்ளி விளையாடிய
பள்ளிச்சிட்டுக்களை
வள்ளிபுனத்தில்
வல்லூறுகளின்
கோரப்பசியில்
கொன்றுமுடித்த
கொடிய நினைவுகள்

கொழுத்தி எரியும்
வலியும் வதையும்
யாருக்குத்தான் புரியும்!

பாதகர் கூட்டத்தின்
படுகொலைகள்
பலநூறு இருந்தும்
சர்வதேசமோ
ஓரவஞ்சகத்தில்
உருள்கிறது!

ஆனாலும்
மனிதமுள்ளவன்
அதிகாரத்தில்
அமர்கின்றவரை
நீதிக்கான எம்குரல்
ஓயாது ஒலிக்கட்டும்
காயம் சுமந்தவர்களால்த்தான்
வலியின் வேதனையை
உணரமுடியும்!
அதனை
மாற்றவும்
முயலமுடியும்!

✍தூயவன்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments