சென்னையில் கொரோனா : 168 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

  • Post author:
You are currently viewing சென்னையில் கொரோனா : 168 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 168 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 17 அன்று 84 இடங்களாக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், இன்று மேலும் 84 இடங்கள் அதிகரித்து 168 ஆக உள்ளன. அதேபோல், ஏப்ரல் 17 அன்று 228 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை, நேற்று 523 ஆக அதிகரித்து உள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 46 இடங்களும், திரு.வி.க நகரில் 28 இடங்களும், தேனாம்பேட்டையில் 26 இடங்களும், தண்டையார்பேட்டையில் 22 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், கோடம்பாக்கத்தில் 9 இடங்களும், திருவொற்றியூரில் 8 இடங்களும், வளசரவாக்கத்தில் 7 இடங்களும், பெருங்குடியில் 6 இடங்களும், அண்ணாநகரில் 4 இடங்களும், மாதவரத்தில் 3 இடங்களும், அடையாரில் 3 இடங்களும், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூரில் 2 இடங்களும், அம்பத்தூர் மற்றும் மணலியில் தலா ஒரு இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

பகிர்ந்துகொள்ள