செம்பியன்பற்று கடற்கரையில் மனித எலும்புக்கூடு கரைஒதுங்கியுள்ளது!

You are currently viewing செம்பியன்பற்று கடற்கரையில் மனித எலும்புக்கூடு கரைஒதுங்கியுள்ளது!

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று சற்று முன்னதாக கரையொதுங்கியுள்ளது.

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று கிராமத்திற்கும் தனிப்பனை கிராமத்திற்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று எலும்புக்கூடாக கரையொதுங்கியுள்ளது.

இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பளைப் பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேல் நடவடிக்கையினை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள