ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக போராட்டம் தொடரும்!

You are currently viewing ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக போராட்டம் தொடரும்!

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துகின்ற ஜெனிவா தீர்மானங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடப் போவதாக, றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு கொழும்பு மாவட்டத்தில் அதிக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற றியர் அட்மிரல் சரத் வீரசேகர செய்தியாளர்களைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மீண்டும் தீர்மானம் முன்வைக்கப்படும் என்றும், தெரிவித்துள்ள றியர் அட்மிரல் சரத் வீரசேகர அதற்கு எதிராக புதிய அரசாங்கத்தின் ஆதரவுடன் தொடர்ந்து போராடப் போவதாகவும், கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் திட்டத்திற்கு மக்கள் ஒப்புதல் அளித்து, அதிகாரம் அளித்திருப்பது, இலங்கைக்கு எதிராக சதி செய்யும் ஐ.நாவின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகா மற்றும் புலம்பெயர்ந்துள்ள புலி ஆதரவார்களுக்கு பெரும் தோல்வியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பகிர்ந்துகொள்ள