ஜேர்மனியில் இருந்து வந்தவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் மரணம்!!

You are currently viewing ஜேர்மனியில் இருந்து வந்தவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் நேற்று இருவர் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியிலிருந்து வருகை தந்த யாழ். மாநகர எல்லைப் பகுதியைச் சேர்ந்த ரி.தர்சன் என்பவரும், 56 வயதான ஜஸ்மின் யூட் என்ற பெண்ணுமே உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையின் போதோ இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.

இதேவேளை

பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் நேற்று பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 6 பேரில் ஐவர் பருத்தித்துறை கடற்கரை வீதியில் வசிப்பவர்கள். ஒருவர் பருத்தித்துறை நகர் பகுதியில் வசிப்பவர்.

அத்துடன் மந்திகையில் பெறப்பட்ட மாதிரிகளில் வர்த்தகர்கள் மூவர், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் என ஆறு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments