டிரம்ப் எதிர்வரும் 24ம் திகதி இந்தியா வருகை; வெள்ளை மாளிகை அறிவிப்பு!

  • Post author:
You are currently viewing டிரம்ப் எதிர்வரும் 24ம் திகதி இந்தியா வருகை; வெள்ளை மாளிகை அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்வரும் 24ம் திகதி இந்தியாவுக்கு வருகை தருகிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் அமையும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.

கடந்த வாரம் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டனர் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த பயணத்தில் புதுடெல்லி மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளுக்கு இருவரும் செல்கின்றனர்.  நாட்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்ற வகையில் இவர்களது பயணத்தில் குஜராத் இடம்பெற்றுள்ளது.

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற டிரம்ப் விருந்து வழங்கினார்.  இந்த பயணத்தில் பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் ’ஹவுடி மோடி’ என டிரம்ப் குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள