தனிமைப்படுத்தல் வாகனம் மோதி முதியவர் பலி கல்வீசி மக்கள் முறுகல்,இராணுவம் குவிப்பு!

You are currently viewing தனிமைப்படுத்தல் வாகனம் மோதி முதியவர் பலி கல்வீசி மக்கள் முறுகல்,இராணுவம் குவிப்பு!

யாழ்.மட்டுவில் – பன்றித்தலைச்சி அம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு காட்டியதால் பிரதேசத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது

.தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிவந்த பேருந்து மட்டுவில் பகுதியில் முதியவர் ஒருவர் மீது மோதியதில் முதியவர் உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதியில் கூடிய மக்கள் பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதனையடுத்து பிரதேசத்தில் கலகம் தடுக்கும் தயர்ப்படுத்தலுடன் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகவும், கல் வீசி தாக்குதல் நடத்திய சிலர் இராணுவத்தால் துரத்திப் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் வாகனம் மோதி முதியவர் பலி கல்வீசி மக்கள் முறுகல்,இராணுவம் குவிப்பு! 1
தனிமைப்படுத்தல் வாகனம் மோதி முதியவர் பலி கல்வீசி மக்கள் முறுகல்,இராணுவம் குவிப்பு! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments