தனியார் குடில்களுக்கு செல்லும் தனிமைப் படுத்தப்பட்ட நபர்கள்!

  • Post author:
You are currently viewing தனியார் குடில்களுக்கு செல்லும் தனிமைப் படுத்தப்பட்ட நபர்கள்!

Agderல் உள்ள Bykle நகராட்சியில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் Hovden பனிச்சறுக்கு கட்டிடப் பகுதியில் வசதிகள் கொண்ட தனியார் குடில்களில் (Hytta) அவதானிக்கப்பட்டுள்ளனர் என்று செய்தித்தாள் Fædrelandsvennen கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்களை நகராட்சி விரைவில் தொடர்பு கொள்ளும் என்றும், இங்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது என்றும், வழிகாட்டுதல்களை மீறுவது மிகவும் பொறுப்பற்றது என்றும் Bykle நகரசபை தலைவர் Jon Rolf Næss கூறியுள்ளார்.

இதேபோல் மற்றைய நகராட்சிகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தனியார் குடில்களில் அவதானிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக Sirdalல், வீட்டு தனிமைப்படுத்தலுக்கான விதிகள் மீறப்பட்டு, மக்களிடையே நடமாடிய நபர் மாவட்ட மருத்துவரால் மீண்டும் தனிமைப் படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள