தமது வீடுகளுக்கு செல்லும் 47 இந்திய மீனவர்கள்!

You are currently viewing தமது வீடுகளுக்கு செல்லும் 47 இந்திய மீனவர்கள்!

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 

சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். 

விடுதலை செய்யப்பட்ட இந்த 56 மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கொழும்பில் இந்திய தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 47 மீனவர்களும் இன்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments