தமிழகத்தில், இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது கொரோனா!

  • Post author:
You are currently viewing தமிழகத்தில், இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது.

இதில், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள் 1897 பேர் என்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து வீடு திரும்பியவர்கள் 22 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36,841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17,179 என்றும்
குணமடைந்தோர் எண்ணிக்கை 19,333 என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கோரோனோ தோற்றால் இதுவரை தமிழகத்தில் 326 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள