தமிழகத்தில் இன்று : 786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு!

  • Post author:
You are currently viewing தமிழகத்தில் இன்று : 786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று மட்டு 12,653 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 98 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று : 786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு! 1
பகிர்ந்துகொள்ள