தமிழகத்தில் கொரோனா : இன்று 231 பேருக்கு கொரோனா தொற்று!

  • Post author:
You are currently viewing தமிழகத்தில் கொரோனா : இன்று 231 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், சென்னையில் 174 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று புதிதாக 231 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 174 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மொத்தம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1257 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் 158 பேர் ஆண், 72 பேர் பெண், ஒருவர் திருநங்கை ஆவர்.

சென்னையைச் சேர்ந்த 76 வயது மூதாட்டிக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர் இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1341 ஆக உயர்ந்துள்ளது

தமிழகத்தில் கொரோனா : இன்று 231 பேருக்கு கொரோனா தொற்று! 1
பகிர்ந்துகொள்ள