தமிழகத்தில் கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது!

  • Post author:
You are currently viewing தமிழகத்தில் கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர்.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் இன்று 13,081 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 480 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் 28 பேருக்கும், திருவள்ளூரில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர். இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள