தமிழருக்கு ஒரே தீர்வு தமிழீழம்தான்!பிரான்ஸ் நகராட்சி

You are currently viewing தமிழருக்கு ஒரே தீர்வு தமிழீழம்தான்!பிரான்ஸ் நகராட்சி

பொண்டி நகராட்சியை தொடர்ந்து பிரான்சு இவ்றி-சூர்- சென் (Ivry-sur-Seine) நகரசபையில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரான்சு பாரிஸ் நகரை அண்மித்த நகரங்களில் ஒன்றான இவ்றி-சூர்- சென் (Ivry-sur-Seine) நகரின் நகரசபையினால் 08.04.2021 வியாழக்கிழமை அன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீமனத்தில்
இலங்கையில் நடை பெற்றது இனப்படுகொலை என்றும் தமிழினப்படுகொலை செய்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அனைத்துலக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம் தான் நிரந்தர அரசியல் தீர்வாக இருக்க முடியும் எனவும், இவை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தீர்மானம் இவ்றி-சூர்-சென் நகரசபை முதல்வர், நகரசபை பிரதி முதல்வர், நகரசபை உறுப்பினர்கள் போன்றோரின் ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுள்ளது.

பகிர்ந்துகொள்ள