தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் 1800 வது நாள் போராட்டம்!

You are currently viewing தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் 1800 வது நாள் போராட்டம்!
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் 1800 வது நாள் போராட்டம்! 1
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் 1800 வது நாள் போராட்டம்! 2

இந்தியா, ஏதேனும் சொத்துக்களை சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கு தமிழர் தாயகத்தில் எடுக்க விரும்பினால் தமிழர்களுடன் பேச வேண்டும்.

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தால் எமது பிள்ளைகளை கண்டறியும் எமது போராட்டத்தின் 1800 வது நாளான இன்று நாம் தொடர்கின்றோம்.நேற்று எம்மைவிட்டு பிரிந்த ராமாயி அம்மாவுடன் 114 தாய் தந்தையர் தமது பிள்ளைகளை காணாமலே சாவடைந்து உள்ளனர்.
தமிழர் தேசம் இவர்களை வணங்குகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தைகளை தேடி வரும் தாய்மார்கள் தை பொங்கலை கொண்டாட முடியாமல் தவித்தனர்.

இந்தியா தலைமைப் பாத்திரம் ஏற்று, ஐ.நா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தினால், தமிழர் தாயகத்தில் கச்சத்தீவு, திருகோணமலை துறைமுகம் மற்றும் பிற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தமிழர்கள் தயாராக உள்ளனர்.

இலங்கையால் அல்லது ஐ.நாவால் திரும்பப் பெற முடியாத நிரந்தர, பாதுகாப்பான, பாதுகாக்கப்பட்ட தாயகம் எமக்கு தேவை.

தமிழர் தாயகத்தில் எங்கள் இறையாண்மை என்பது எங்களின் பிறப்பு உரிமை. தமிழர்கள் மீதான பிரித்தானிய பாகுபாட்டால் இலங்கையிடம் எமது இறையாண்மையை இழந்தோம். ஐரோப்பியப் படையெடுப்பிற்கு முன்பிருந்ததை போன்ற தமிழர்கள் தமது சொந்த இறையாண்மையின் பாதுகாப்பான நிரந்தரமான மீள பெற முடியாத தீர்வைக் தமிழர்களுக்கு கொடுத்துவிட்டு ஆங்கிலேயர்கள் இலங்கையை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.

தமிழர் தாயகத்தில் இந்தியாவுக்கு ஏதாவது தேவையென்றால், இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடம் சிங்களவர்களிடம் அல்ல.

இந்தியா இலங்கையுடன் பேசினால், இந்தியா இலங்கையுடன் செய்து கொண்ட சொந்த ஒப்பந்தத்தை மீறும்.

இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என்பதையும், ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அந்தஸ்து நிலுவையில் இருப்பதையும் நாம் அறிவோம். இந்தியாவின் தலைமைத்துவத்தை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அது தனது ஒப்பந்தத்தை இலங்கையில் மீறியது என்பது குறிப்பிடத்தக்கது.

1987 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்த போது, ​​வடகிழக்கு தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றும், வடகிழக்கு தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு அது தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவால் ஏற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது . வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் தமிழர்களுக்கு உரிமையானது , அதாவது தமிழர்களுக்கு அவர்கள் நிலத்தின் மீது அதிகாரம் உள்ளது உட்பட பல விஷயங்கள் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தின் தலைநகர் திருகோணமலை என்பது கவனிக்கத்தக்கது. உண்மையில் அது 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை காலத்தில் வடகிழக்கு மாகாண சபையை திருகோணமலையில் வைத்து இந்தியாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இப்போது திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியா வாங்கியது. இது இந்தியாவின் உடன்படிக்கையின் தூய்மையான மீறலாகும், வடகிழக்கு பகுதி தமிழர்களுக்கே உரியது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும்.

இலங்கையுடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடும் முன் இந்தியா தமிழர்களிடம் கேட்டிருக்க வேண்டும். சீனத் தொடர்புகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை புவிசார் அரசியலை விளையாட விரும்புகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தமிழர்களின் அனுமதியின்றி வடக்கு கிழக்கில் எவராலும் காணிகளையோ எண்ணெய் தாங்கிகளையோ கொள்வனவு செய்ய முடியாது.

ஒப்பந்தத்தின்படி, 14 டாங்கிகள் இந்தியாவின் பயன்பாட்டுக்காகவும், 24 இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட தாகவும் இருக்கும். மேலும், 61 தொட்டிகள் இந்தியாவுக்கு 2072 வரை கூட்டாகச் சொந்தமாக இருக்கும்.

நன்றி.கோ .ராஜ்குமார்
செயலாளர் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments