தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் ஈருருளிப் பயணம்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் ஈருருளிப் பயணம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்   கடந்த (17.02.2023 )  காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பித்து ,பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர்  ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டதோடு,சம நேரத்தில்  தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி   நெதர்லாந்திலிருந்தும்   மனித நேய ஈருருளிப்பயணம்   ஆரம்பமாகியிருந்தது.

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் ஈருருளிப் பயணம்! 1

இந்த   மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் டென் ஹாக்  நகரில் அமைந்துள்ள  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்  ( International Criminal Court)    முன்பாக  கனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று, நெதர்லாந்து நாட்டினைக்கடந்து ,பின் பெல்சியம் நாட்டினை ஊடறுத்து ,பெல்சியத்திலுள்ள மற்றுமொரு நகரமாகிய அர்லோன்(Belgiem Arlon) நகரத்தை அடைந்து அங்கு மாநகரசபை முதல்வரைச் சந்தித்து தமிழின அழிப்புச் சம்பந்தமான மனு கையளிக்கப்பட்டு,பின் லுக்ஸ்சம்பூர்க்(Luxemburg) எல்லையை வந்தடைந்த ஈருருளிப்பணப் போராட்டம் யேர்மனி நோக்கி பயணித்து,சார்புறூக்கன் நகரத்தில் அரசியல் சந்திப்பினை நடத்தி மனுக்கையளித்ததோடு தொடர்ந்து பயணித்து,லண்டோவ் நகரத்தில் அரசியல் சந்திப்பு மற்றும் மனுக்கையளிப்பினைத் தொடர்ந்து ஜேர்மன் நாட்டினை ஊடறுத்து,பிரான்ஸ் நாட்டுக்குள் பயணித்து, நேற்றைய தினம் சிற்றிகைம் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்து ஸ்ராஸ்பூர்க் மற்றும் இல்கிரிச் ஆகிய நகரசபைகளில் மனுக்கையளித்து ,மாலை எர்ச்தைன் நகரசபையில் நிறைவு பெற்றது.இன்று காலை(27.02.2023) அகவணக்கத்துடன் எர்ச்தைன் நகரத்திலிருந்து நீதிக்கான போராட்டம் ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் ஏர்செய்ன்,பேன்பெட்,கொல்மர்  ஆகிய நகரங்களில் சந்திப்புக்களை மேற்கொண்டு மனுக்கையளிக்கப்பட்டதோடுமுலுசு மாநகரை நோக்கிப் பயணித்து மாலை நிறைவுபெற்றுள்ளது.தொடர்ந்தும் பிரான்சை ஊடறுத்து நீதிக்கான ஈருருளிப் பயணம் பயணித்து .01.03.2023 அன்று சுவிஸ் நாட்டிற்குள் சென்று, 06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.அதனைத் தொடர்ந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் ஈருருளிப் பயணம்! 2

ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் அறவழிப்போராட்டக்கார்ர்களை ஒவ்வொரு நாட்டு மக்களும் வரவேற்று, உணர்வெழுச்சியுடன் தங்களது ஆதரவினை வழங்குவதோடு, இப்போராட்டங்களில் இணைந்து கொள்ளுவதும் காலத்தின் கடமையென்பதை உணர்ந்து பயணிப்போம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

என்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அரசியல் எழுச்சியினை உளமேற்று பயணிப்போம்.

“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments