தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இலங்கை தமிழரசுக் கட்சி உரிமை கோர முடியாது – சுரேஷ், செல்வம் தெரிவிப்பு

You are currently viewing தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இலங்கை தமிழரசுக் கட்சி உரிமை கோர முடியாது – சுரேஷ், செல்வம் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி உரிமை கோரமுடியாது என்று சுரேஷ் பிரேச்சந்திரன் மற்றும், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்பினர் பயன்படுத்த முடியாது என்று சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ள நிலையில் அதுதொடர்பில் கருத்துவெளியிட்ட சுரேஷ்பிரேமச்சந்திரன்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்படாத வொன்றாகும். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக்கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தி அக்கட்சியின் மத்தியகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக வெளியேறியுள்ள நிலையில் கூட்டமைப்பில் உள்ள ஏனை இரு கட்சிகளும் தொடர்ந்தும் கூட்டமைப்பாகவே செயற்படவுள்ளன.

அந்தக் கூட்டமைப்பில் நாம் இணைந்துள்ளோம். ஏனைய இரு தரப்பினரும் இணைந்துள்ளனர். ஆகவே, தமிழரசுக்கட்சிக்கு கூட்டமைப்பை உரிமைகோரும் உரித்துக் கிடையாது என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை தமிழரசுக்கட்சியோ அல்லது, அதிலிருக்கும் ஏனைய தரப்புக்களான ரெலோ,புளொட்டோ பயன்படுத்துவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதனிடத்தில் வினவியபோது, “இறுதியாக சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை. அவ்வாறான நிலையில் எவ்வாறு இணக்கப்பாட்டை எட்டமுடியும்”என்று கேள்வி எழுப்பினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments