தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 460 பேர் உயிரிழப்பு: மொத்த உயிரிழப்பு 25,665 ஆக உயர்வு!

You are currently viewing தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 460 பேர் உயிரிழப்பு: மொத்த உயிரிழப்பு 25,665 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் நாளாந்த தொற்றாளர்களது எண்ணிக்கை குறைவடைந்த வந்தாலும் கொரோனாவுக்கு நேற்றைய தினம் மேலும் 460 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (ஜூன்-03) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 24 ஆயிரத்து 405 ஆக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 2 ஆயிரத்து 980 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 48 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கோயம்புத்தூரில் இதுவரை மொத்த தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 898 ஆகவும், மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 394 ஆகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் 2 ஆயிரத்து 62 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 68 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 5 இலட்சத்து 11 ஆயிரத்து 258 ஆகவும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 7 ஆயிரத்து 291 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 21 இலட்சத்து 72 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 460 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 2 இலட்சத்து 80 ஆயிரத்து 426 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments