தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு கொரோனா!

You are currently viewing தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1323ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் 34 பேர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 23,934 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1891 பேர் நோய்க் குறிகளுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை 29,673 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், 1323 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2,023 சோதனைகளின் முடிவுகள் இன்னும் வெளிவர வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றுவரை 1267 பேருக்கு அந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 56 பேருக்கு அந்நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் 103 பேர் இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாநிலத்திலேயே அதிக அளவாக சென்னையில்தான் 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள