தமிழ்மக்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலிய நகரங்களில் அணிதிரண்ட மக்கள்!!

You are currently viewing தமிழ்மக்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலிய நகரங்களில் அணிதிரண்ட மக்கள்!!

ஐக்கியநாடுகள்மனிதவுரிமைபேரவை ஊடாக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையில்

தமிழ்மக்களிற்கான நீதி தொடர்பான விடயத்தில்தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும்

 தாயக மற்றும்புலம் பெயர்நாடுகளில்மேற்கொள்ளப்படுகின்ற கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து

 நேற்று சனிக்கிழமை

 13-05-2021 

அன்று அவுஸ்திரேலியாவின்ஐந்துபெருநகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

 நடைபெற்றுள்ளது


சிட்னி பரமட்டா நகரில் காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.


தமிழ் இளம்செயற்பாட்டாளர் றேணுகா இன்பகுமார் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில் தமிழ்ச்செயற்பாட்டாளர் அவி செல்வராசா, மற்றும் நர்மதா டி லிலியோ அவர்களும், முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியமாக இருக்கின்ற 

தமிழ் இளையோர் சார்பில் கதிரினி இரட்ணகுமார் ஆகியோர் உரையாற்றினர்.


இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்தும் பிரித்தானியாவில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களுக்கு ஆதரவு  தெரிவித்தும் Dr Hugh McDermott (NSW State MP for Prospect), David SHOEBRIDGE (Greens NSW MP), Mahreen Farudi (NSW Senator) ஆகியோர்  வெளியிட்டகருத்துக்கள் ஒலிபரப்பட்டன.


உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வு  மதியம் ஒருமணிக்கு நிறைவடைந்தது.

தமிழ்மக்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலிய நகரங்களில் அணிதிரண்ட மக்கள்!! 1
தமிழ்மக்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலிய நகரங்களில் அணிதிரண்ட மக்கள்!! 2
பகிர்ந்துகொள்ள