தான்சானியாவில் ஏரியில் விழுந்த விமானம்: பலர் மாயம்!

You are currently viewing தான்சானியாவில் ஏரியில் விழுந்த விமானம்: பலர் மாயம்!

தான்சானியாவில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தானது நேற்று (06-11-2022) அதிகாலை ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

விபத்து தொடர்பில் தகவலறிந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் 100 மீட்டர் உயரத்தில் நடுவானில் சென்ற போது மோசமான வானிலை நிலவியது. மேலும் மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தண்ணீரில் மூழ்கியது.

விமானத்தில் பயணிகள் 26 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நேற்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments