தாயுடன் தொடர்பு வைத்து 13 வயது மகளையும் துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

You are currently viewing தாயுடன் தொடர்பு வைத்து 13 வயது மகளையும் துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

யாழ்ப்பாணம்- கல்லுண்டாய் பகுதியில் பெண் ஒருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபர், அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாயாரான பெண்ணுடன் 41 வயதான நபர் ஒருவர் தவறான உறவினை பேணி வந்துள்ளார் எனவும், அப்பெண்ணின் 13 வயதான சிறுமியையும் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது..

இது தொடர்பில் அறிந்த, அயலவர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , மானிப்பாய் சிறீலங்கா காவற்முறையினர் இன்று அந்நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சிறீலங்கா காவற்முறையினர் அனுமதித்துள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments