தாய் பணம் கொடுக்க மறுத்ததால் தவறான முடிவெடுத்து இளைஞர் மரணம்!

You are currently viewing தாய் பணம் கொடுக்க மறுத்ததால் தவறான முடிவெடுத்து இளைஞர் மரணம்!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வரணிப்பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.  தாய் பணம் கொடுக்க மறுத்ததாலே அவர் தவறான முடிவெடுத்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இச் சம்பவம் நேற்று முன்தினம்(29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தாயாருடன் கோபித்துக் கொண்டு சென்று அம்மம்மாவின் வீட்டில் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.வரணி கரம்பைக்குறிச்சியைச் சேர்ந்த  மகேந்திரம் மகேந்திரன் தினோஜன்(வயது 24) என்பவரே உயிரழந்துள்ளார்

பகிர்ந்துகொள்ள