திருகோணமலையில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

You are currently viewing திருகோணமலையில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து இன்று(25) காலை மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை – திருக்கடலூர் ஹர்தாஸ் வத்த பகுதியைச் சேர்ந்த ஈ.ஜே.ஏ.ஜான (45 வயது) என பொலிசார் தெரிவிக்கின்றனர். படகில் நால்வர் சென்றதாகவும் படகு கவிழ்ந்ததில் மூவர் நீந்திய கரையேறியபோதும் ஒருவர் நீரில் மூழ்கியதாகவும். தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நிலையில் அவர் மீட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மீனவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பகிர்ந்துகொள்ள