திருகோணமலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

You are currently viewing திருகோணமலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

breaking

கிழக்ககுப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நிலவி வருகின்ற கல்வி மற்றும் நலன்புரி உட்கட்டமைப்பு தொடர்பான குறைபாடுகளை உடனடியாக தீர்க்கக்கோரி இன்று (வெள்ளிக்கிழமை)திருகோணமலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவ சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டமானது அபயபுர சுற்று வட்டத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வழாகத்தில் காணப்படும் விடுதிகள் விளையாட்டு மைதானம் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என  வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

பெருந்திரளான மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வீதி ஊடான போக்குவரத்து பல மணி நேரம் தடைபட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments