திருகோணமலை கடலில் மீன்பிடிக்கச் சென்ற நபர் உயிரிழப்பு !

You are currently viewing திருகோணமலை கடலில் மீன்பிடிக்கச் சென்ற நபர் உயிரிழப்பு !

திருகோணமலை – ஈச்சிலம்பற்று சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட, கருக்காமுனை களப்புக் கடலில் ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (18-10-2022) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஈச்சிலம்பற்று – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நாகராசா தேவராசா ( வயது 51) என இனங்காணப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று காலை கருக்காமுனை களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வேளையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்று இதுவரை கண்டறியப்படவில்லை என சிறீலங்கா காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஈச்சிலம்பற்று சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments