திருத்தணிக்காசலம் மீது அரசு புகார் ; காவல்துறையினர் நடவடிக்கை!

  • Post author:
You are currently viewing திருத்தணிக்காசலம் மீது அரசு புகார் ; காவல்துறையினர் நடவடிக்கை!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வந்த திருத்தணிகாசலம் மீது அரசு தரப்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
“தொற்று நோய் காலத்தில் தவறான தகவல்களை வழங்க வேண்டாம் என்று அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்” என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “கோவிட் -19 எனும் கொரோனா வைரஸ் குறித்து WhatsApp, முகநூல் போன்ற இலத்திரனியல் ஊடகங்க லில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் “The Epidemic Diseases Act And Regulations” பிரிவு 8-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது”.

இந்நிலையில் மேற்கண்ட வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, மைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் என்பவர் கோவிட் -19 எனும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால், அவர் மீது உடனடியாக உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க, இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அவர்களால் சென்னை, காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்தொற்று நோய் காலத்தில் தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள