தேசியத்தலைவரின் படத்தை வைத்திருந்த கோப்பாய் இளைஞனுக்கு விளக்கமறியல்!

You are currently viewing தேசியத்தலைவரின் படத்தை வைத்திருந்த கோப்பாய் இளைஞனுக்கு விளக்கமறியல்!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்  நிழற்படத்தை தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  இளைஞனை விளக்கமறியலில்  வைக்குமாறு யாழ் .நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் படத்தை தனது தொலைபேசியில்  வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு நேற்றைய தினம் சிறிலங்கா  காவல்துறையினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இளைஞனை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்திய போது எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

பகிர்ந்துகொள்ள