தொடரும் துப்பாக்கிச்சூடுகள் – கொழும்பு மட்டக்குளியில் ஒருவர் உயிரிழப்பு!

You are currently viewing தொடரும் துப்பாக்கிச்சூடுகள் – கொழும்பு மட்டக்குளியில் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்குளி – அலிவத்தை பகுதியில் நேற்று (29) இரவு மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர், இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அலிவத்த ஹசித் என அழைக்கப்படும் ரணவக்க ஆரச்சிலாகே ஹசித்த சதுரங்க என்ற 26 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இடையில் காணப்பட்ட பிரச்சினையே இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணமாக இருக்கலாம் என சிறீலங்கா காவற்துறையினர் குறிப்பிடுகின்றார்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மட்டக்குளி சிறீலங்கா காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments