நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்து உதவிய அமைச்சர்!

You are currently viewing நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்து உதவிய அமைச்சர்!

இலங்கையரான நடிகர் போண்டாமணி தற்போது மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அதோடு பிரபல நடிகர் பெஞ்சமின் போண்டா மணிக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்து இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த நிலையில் ஓமந்தாரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த தகவலையும் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருவதாகவும், நாளை முதல் டையாலிசிஸ் சிகிச்சை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு அவரது உறவினர்கள் மூலமாகவோ அல்லது உறுப்பு தான ஆணையத்தின் மூலமாகவோ சிறுநீரகம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகள் அனைத்தையும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments