நாடுதிரும்பிய மேலும் 45 பேர் உட்பட 2,682 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing நாடுதிரும்பிய மேலும் 45 பேர் உட்பட 2,682 பேருக்கு தொற்றுறுதி!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய இலங்கையர்களில் மேலும் 45 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் நேற்றைய தினம் (ஜூன்-08) 2,682 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திருபம்பிய இலங்கையர்கள் 45 பேர் மற்றும் புதுவருடக் கொத்தணியில் 2,637 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 210,661 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மேலும் 54 பேர் உயிரிழந்திருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 1,843 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 178,259 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 30,559 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments