நாடுதிரும்பிய 22 பேர் உட்பட 2349 பேருக்கு தொற்றுறுதி: மொத்த தொற்று 235,413 ஆக அதிகரிப்பு!

You are currently viewing நாடுதிரும்பிய 22 பேர் உட்பட 2349 பேருக்கு தொற்றுறுதி: மொத்த தொற்று 235,413 ஆக அதிகரிப்பு!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களில் மேலும் 22 பேர் உட்பட 2349 பேருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் (ஜூன்-18) மேலும் 2349 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 20 ஆயிரத்து 211 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு 2349 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் மேலும் 22 பேருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர ஏனைய 2327 பேரும் புதுவருட கொத்தணியுடன் தொடர்புபட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களது மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments